Thursday, April 26, 2007

நான் யாரு எனக்கே தெரியலயே

"நான் யாரு எனக்கே தெரியலயே...... அதைக் கேட்டா நான் சொல்ல வழியில்லயே...."

(குரல் பிரபல கிரிக்கெட் பிளேயரைப் போல் இருக்க, நெருங்கிப் பார்த்தால் நம்ம இர்பான் பதான்)

சார், நீங்களா

வாழ்க்கையே ஒரே குழப்பமா இருக்கு சார், ஒங்களுக்காவது தெரியுமா, நான் யாருன்னு

நீங்க பதான்

அதான் எனக்குத் தெரியுமே. இன்ஃபாக்ட் அது மட்டும் தான் எனக்கு இப்ப உறுதியா தெரியுது. நான் கேட்டது நான் பவுலரா, பேட்ஸ்மேனா இல்ல ஆல்ரவுண்டரான்னு உங்களுக்காவது தெரியுமான்னு கேட்டேன்.

நீங்க பவுலராத் தானே வந்தீங்க

பவுலராத்தான் வந்தேன். ஆனா எனக்கு நல்ல பேட்டிங் திறமையும் இருக்குனு சொன்னாங்களே.

ஆமா சார், நீங்க தான் பேட்டிங்ல கலக்கினீங்களே.

ஆனா அப்ப பவுலிங் போயிடுச்சே.

அக்ரம் சார்ட்ட டிப்ஸ் கேக்கலாமே

சீச்சி....சும்மா அவர் பேக்கை தூக்கிச் சுமக்கறதுக்கெல்லாமா டிப்ஸ் கேப்பாங்க

நான் பவுலிங் டிப்ஸை சொன்னேன் சார்

ஓ... அதைச் சொல்றீங்களா.....அவர் என்ன சொல்றாரு, கையை இப்படி வளைங்க அப்படி வளைங்கங்கிறாரு. கண்ட மாதிரி நான் கையை வளைச்சு நின்னதப் பார்த்து ஒரு பிரேக் டான்ஸர் நல்ல பழக்கமாயிட்டான். பேசாம அப்படியே பிக்கப் ஆயி பிரேக் டான்ஸரா போயிடலாமான்னு யோசிக்கறேன். ஆனா அங்கயும் கோச் தொல்லை இருக்கும்கிறாங்க.... பார்க்கலாம்.

(வந்தவர் யோசிக்கிறார்) பவுலராத்தான் வந்தாரு.....பவுலிங் எனக்கு வருமான்னு கேக்கறாரு. பவுலிங் போட்டாத்தான் நான் ஆல்ரவுண்டரான்னும் கேக்கறாரு...ஆமா, ஃபிளின்டாப் கூட சில மேட்ச் பேட்டிங் மட்டும் பிடிச்சு பவுலிங் போடாமத் தான் இருக்காரு. அதுக்காக அன்னிக்கு மட்டும் அவர் ஆல்ரவுண்டர் இல்லன்னா அர்த்தம்..... மேலும் மேலும் ஒரே குழப்பமாவே இருக்கே....

....ஒரேயடியாக் குழப்பறீங்களே சார்

என்னைப் பார்க்கிற உங்களுக்கே இவ்வளவு குழப்பமா இருக்கே.... நானாவே இருக்க எனக்கு எவ்வளவு குழப்பமா இருக்கும்... கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க...

(இன்னொருவர் 'அட, நம்ம இர்பான் தம்பி மாதிரி இருக்கே' என்று அருகில் வர, வந்தவர் யோசித்தவாறே நகலத் துவங்குகிறார்.)

1 comment:

நாமக்கல் சிபி said...

:)

நல்லா இருக்குது. கலாய்ங்க.கலக்குங்க! மாரி!