Thursday, April 26, 2007

எல்லாம் சுத்தறவரு (அட ஆல்ரவுண்டருங்க)

அடஅடஅட....நம்ம சிஸ்டர்கர் பந்து போடறதையும் பேட்டிங் பண்றதையும் பார்த்தா நம்ம் கபில்தேவையும் அமர்நாத்தையும் நேரில பார்த்தா மாதிரி இருக்கு

...யேய்....நிறுத்து நிறுத்து நிறுத்து...நீ இதுவரைக்கும் கிரிக்கெட் பாத்திருக்கியா...

....இல்ல...

----கபில்தேவ் அமர்நாத்தை நேரில பாத்திருக்கியா...

---இல்ல...

---- அப்ப எதை வைச்சு இந்த மூஞ்சியை கபில்தேவ், இந்த மூஞ்சியை அமர்நாத்துனு நீ சொன்னே...

--- ஒரு வெளம்பரம்

---- என்னடா வெளம்பரம்...ஒங்க வெளம்பரத்துக்கு நல்லா வெளயாண்ட நல்ல மனுஷங்க பேரையெல்லாம் ஏன்டா கெடுக்கறீங்க

---அவர் தான்னே சொன்னாரு..... நானும் மும்பை... நீங்களும் மும்பை... ஒரு வெளம்பரத்துக்காக இப்படிச் சொல்லுங்கனு

--- ஏன்டா...நானும் கேக்கறேன்... மும்பை மட்டும் தான் இந்தியாவில இருக்கா.... 25 மாநிலம் இருக்கு.... எல்லா ஊர்லயும் கிரிக்கெட் நடந்துகிட்டு தான் இருக்கு. அப்புறம் ஏன்டா மும்பையை மட்டுமே வெளம்பரப்படுத்தறீங்க.

----இங்க பாரு தம்பி, உனக்கு ஏன் இந்த விளம்பரம், நீ எடுக்கிற 1, 2 விக்கெட்டுக்கு இது தேவைதானா...நீ இந்த மாதிரி வெளம்பரத்துல செலுத்தற கவனத்தை வெளயாட்டுல செலுத்து... நாடு முன்ன மாதிரி இல்ல... ஆமா சொல்லிப்புட்டேன்...ஜனங்களே பார்த்துங்க, இந்த மாதிரி பாவத்துக்கு நான் ஆளாகவே மாட்டேன்.

No comments: